தென்னிலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!
மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பிற்பகல் 3.50 மணியளவில் மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும், தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருவர் பலி
சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இரு வண்டியிலும் மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி ஜீப் வாகனத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை - ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37,36 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்