முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando) உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வர்த்தக அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விலகச் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட குறித்த வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
சதொச நிறுவனத்தின் ஊழியர்கள்
இதன்போது வந்திருந்த சாட்சியாளர்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் பின்னர், மேலதிக சாட்சி விசாரணை பிற்போடப்பட்டது.
2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விலகச் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன்மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தநிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த மொஹமட் ஷாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடான்றில் 326 பேரின் உயிருக்கு வைக்கப்பட்ட உலை : விமானியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்ட பேரிழப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
