கொழும்பு ஏற்றுமதி வலயத்தில் உள்ள மூன்று தொழிற்சாலைகளுக்கு பூட்டு
srilanka
colombo
covid 19
By Vasanth
கொழும்பு ஹொரண பொரலுகொட ஏற்றுமதி வலய பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறித்த வலயத்தில் உள்ள ஐந்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் 31 ஊழியர்களிடம் எழுந்தமானமாக நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 435 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் இவர்களில் 200 பேருக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த முடிவுக்காக காத்திருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி