தென்னிலங்கை தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்பு!
hospital
police
colombo
grenade
narahenpita
By Kalaimathy
கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலேயே கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்