கொழும்பு போராட்ட களத்தில் சந்தேகத்தை கிளப்பும் செயல் ( படங்கள்)
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அங்கு மக்களது பிரசன்னம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான கனரக வாகனங்கள் (இராணுவ, காவல்துறை) குவிக்கப்பட்டுள்ளன.
இதனை நிரூபிக்கும் வகையிலான படங்களும் பகிரப்பட்டுள்ளன.
போராட்ட களத்தில் இதுவரை குறைந்தளவு காவல்துறையினரின் பிரசன்னமே காணப்பட்ட நிலையில், திடீரென கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளமை போராட்டகாரர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.