சிறையில் ஏற்பட்ட தீ: உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த 51 கைதிகள்! சர்வதேச ஊடகங்கள் தகவல்
Police spokesman
Colombia
By Kiruththikan
51 கைதிகள் உயிரிழப்பு
கொலம்பியாவிலுள்ள சிறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது.
இந்த சிறையிலுள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
கலவரத்தின்போது சிறையில் தீ
இந்த கலவரத்தின்போது சிறையில் தீப்பற்றி சிறிது நேரத்தில் சிறை முழுவதிலும் பரவியது.
இந்த தீயில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த தீக்காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி