திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் அனுஷ்டிப்பு
nallur
commemoration
thileepan
By Sumithiran
உண்ணாநோன்பிருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபன் அவா்களின் 34ம் ஆண்டின் 05ம் நாள் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மகளிா் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகா் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள்.
அங்கு நின்றிருந்த இராணுவ புலனாய்வாளா்கள் நினைவேந்தல்கள் நடைபெறுவதை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனா்.