கொமன்வெல்த் போட்டிகள்! கூடைப்பந்து விளையாட்டுக்கு இலங்கையிலிருந்து முதன்முறையாக தெரிவான தமிழ் இளைஞன்
இலங்கையில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக கூடைப் பந்து விளையாட்டு வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய குறித்த இளைஞரே இவ்வாறு கூடைப் பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
அணியின் தலைவர்
இலங்கையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணியின் பிரதித் தலைவராகவும் அதன் பிறகு நடத்தப்பட்ட போட்டிகளில் தலைமைத்துவம் ஏற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கடந்த ஐந்து வருடமாக தொடர்ந்து விளையாடி வருவதுடன், மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தேசிய போட்டிகளில் வெற்றியையும் தனதாக்கி கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




