பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்! இரத்து செய்யப்படும் வர்த்தமானி
கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் மக்கள் எந்தவொரு பொது இடத்துக்கும் செல்வதைத் தடுக்கும் அரசாங்க வர்த்தமானி நேற்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்குச் செல்வதற்கு பூரண தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல 25 ஜனவரி 2022 அன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதையோ அல்லது இருப்பதையோ தடுக்கும் விசேட வர்த்தமானியை வெளியிட்டார்.
இலங்கை முழுவதையும் பொறுத்தமட்டில் முறையான அதிகாரசபையால் விலக்கு அளிக்கப்பட்டாலன்றி, கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் ஒருவர் எந்தவொரு பொது இடத்திலும் நுழையக்கூடாது என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.