சகல சவால்களையும் வெற்றிகொள்வார்! ரணிலுக்கு புகழாரம்
நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் முறையை விட்டுவிட்டு, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் சேதவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாரைக்கு சென்ற அதிபர் சமய கிரியைகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதி சங்கைக்குரிய அம்பன்வல ஞானாலோக தேரர் உள்ளிட்ட பலரை சந்தித்து ஆசீர் வாதங்களை பெற்றுக் கொண்டார்.
சகல சவால்களையும் வெற்றிகொள்ள முடியும்
இதன்போதே நாடு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், தற்போதைய அதிபர் அச்சமின்றி சவாலை ஏற்றுக்கொண்டுள்ளதாக பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் சுட்டிக்காட்டினார்.
சகல சவால்களையும் வெற்றிகொள்ள அதிபரால் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.