கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sri Lanka Police Matara Sri Lanka Police Investigation Money
By Sathangani Apr 18, 2025 06:16 AM GMT
Report

மாத்தறை (Matara) - தேவேந்திரமுனை பகுதியில் சுமார் 3 கோடி ரூபா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த தேவேந்திரமுனை காவல்துறை விசேட அதிரடிப்படையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மகிழுந்தொன்றை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்

மீட்கப்பட்ட பணம் மற்றும் நகை

இதன்போது, அதிலிருந்து 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தையும், 150 கிராம் தங்க நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Constable Arrested With 3 Crore Cash Court Order

அதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில், மகிழுந்தைச் செலுத்திய நபர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பணம் வெளிநாட்டில் வசிக்கும் தமது சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகநபரான கான்ஸ்டபிள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி

ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி

தடுப்புக் காவல்

எனினும், விசாரணைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதால் அவர்கள் மேலதிக விசாரணைக்காகக் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Constable Arrested With 3 Crore Cash Court Order

இந்தநிலையில், நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து அவர்களை விசாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

யாழில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015