மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதித்த விவகாரம் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Mannar
By Sathangani Oct 21, 2024 08:32 AM GMT
Report

மன்னார் (Mannar) மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றில் இன்று (21) காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பதவிகளுக்காக சுமந்திரனுடன் நிற்கும் தமிழரசுக்கட்சியினர்: கே.வி.தவராசா சீற்றம்

பதவிகளுக்காக சுமந்திரனுடன் நிற்கும் தமிழரசுக்கட்சியினர்: கே.வி.தவராசா சீற்றம்

குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள்

இதன்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதித்த விவகாரம் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Contempt Of Mannar High Court Judge Court Order

பிரதான சந்தேகநபர் தற்போது வீட்டில் இல்லை எனவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களே இந்த சம்பவத்திற்கு சாட்சிகள் என நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் பகுதியில் பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்

தமிழர் பகுதியில் பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்

நீதிபதி உத்தரவு 

இந்த நிலையில், சாட்சிகளை விளக்கமறியலில் வைத்தால், காவல்துறையினரால் வழக்குகளை நிரூபிக்க முடியாது எனவும், காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் தோல்வியடைவதற்கு இதுவே காரணம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதித்த விவகாரம் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Contempt Of Mannar High Court Judge Court Order

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை ஏனைய நான்கு சந்தேகநபர்களையும் நவம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025