கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சி! கிவுல் ஓயா திட்டத்திற்கு வெடிக்கும் எதிர்ப்பு
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு தனது ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் இன்று (01) கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உறுதிமொழி
இந்த அறிக்கையில், “ இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதிமொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

இருப்பினும் “நாட்டின் அபிவிருத்தி” என்ற பெயரில் வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் மேற்கூறிய உறுதிமொழிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும்.
இருப்பினும் அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்