தென்னைமரவாடி மக்களுக்கு தொடரும் அநீதி

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples
By Theepachelvan Feb 26, 2024 03:37 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

கண்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும் போர் முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு நமது கவனம் வேறு பக்கங்களில் இருக்க, வடக்கு கிழக்கின் எல்லைப் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமிக்கும் உரிமையை மறுக்கும் போர் நடந்துகொண்டே இருக்கிறது.

அப்படித்தான் அண்மையில் இரு அத்துமீறல்கள் வடக்கு கிழக்கில் நடந்திருக்கிறது.

இலங்கையின் அடுத்த ஆட்சி யாருக்கு என்றும் அதிகாரத்திற்கான அரசியல் ஆட்டங்கள் துவங்கப்படும் சூழலிலும் கூட தமிழர் தேசம்மீதான வழக்கான ஒடுக்குமுறைகள் மாத்திரம் இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது.

யார் ஆண்டாலும், யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் தேசம் மீதான ஒடுக்குமுறைகள் நீங்காமல் தொடரும் என்பதை சிறிலங்கா தேசம் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கருணாநிதியின் நினைவிடம்! உள்ளிருக்கும் முக்கிய அம்சங்கள்

கருணாநிதியின் நினைவிடம்! உள்ளிருக்கும் முக்கிய அம்சங்கள்


வெடுக்குநாறியில் அத்துமீறல்

அண்மையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரங்களில் அழைத்துச் சென்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குமாரும் பேரினவாதத் தலைவர்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் அங்கு ஆலய விக்கிரகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட கொடூரங்களும் இடம்பெற்றன.

இந்த நிலையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் நிலை இலங்கையில் மாத்திரமின்றி தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் கவலையையும் கவனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றம் வரைச் சென்று, வழக்கு தொடுத்து, அங்கு தமிழ் மக்கள் தமது வழிபாட்டுரிமையைப் பெற்றிருந்தினர்.

தென்னைமரவாடி மக்களுக்கு தொடரும் அநீதி | Continued Injustice To The Tamil People

கடந்த சில மாதங்களாகவே அங்கு மக்கள் அமைதியாக வழிபாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அப் பகுதியில் பௌத்த சிங்கள பேரினவாத்தின் அச்சுறுத்தல் திரும்பியுள்ளது.

இராணுவத்தினரால் உழவு இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்பட்ட பௌத்த பிக்குமார், வெடுக்குநாறி மலை தமது பூர்வீகமான இடம் என்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளனர்.

இதேவேளை, பௌத்த சிங்களமயமாக்கலுக்குப் பின்னால் இராணுவத்தினரே உள்ளனர் என்பதும் வெடுக்குநாறி மலைக்கு பௌத்த பிக்குமாரை அழைத்துச் சென்றமையின் ஊடாக மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் காவல்துறையினரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

யாழ் காவல்துறையினரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்


கந்தசாமி மலை முருகன் ஆயலத்திலும் அச்சுறுத்தல்

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியான திருகோணமலையின் தென்னைமரவாடி பகுதி முல்லைத்தீவின் எல்லைப் பகுதியான கொக்கிளாயை அண்மித்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் இதயப் பகுதியாக விளங்கும் இக் கிராமத்தில் கந்தசாமி மலை முருகன் ஆலயம் பன்னெடுங்காலமாக உள்ளது.

அங்கு பௌர்ணமி தினமன்று மாதம் தோறும் பொங்கல் வழிபாடு செய்வது மக்களின் மரபாகவும் பண்பாடாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் அண்மையில் அவ் ஆலயத்திற்கு பொங்கல் விழா சென்ற வேளையில் புல்மோட்டைப் காவல்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவைக் காட்டி பொங்கல் விழாவை நடாத்தாமல் தடுத்துள்ளனர்.

தென்னைமரவாடி மக்களுக்கு தொடரும் அநீதி | Continued Injustice To The Tamil People

வழக்கம்போல பொங்கல் நிகழ்வை நடாத்த தென்னைமரவாடி மக்களும் திருகோணமலையின் பல பகுதிகளையும் சார்ந்த மக்களும் கோயிலடிக்கு திரண்டுள்ளனர்.

பொங்கலுக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென நுழைந்த நூறுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலணாய்வாளர்கள் கலகம் அடக்கும் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் காரணமின்றி தடுத்து வைத்தனர்.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், காலம் காலமாக தாம் மேற்கொண்டு வரும் பண்பாட்டு நிகழ்வுக்கு வழிபாட்டு உரிமைக்கு தடை விதித்தமை கண்டு மக்கள் கவலையுற்றனர். 

பௌத்த இடமெனக் கதை

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தென்னமராவடி கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பிரதேசம் சங்கமலை புராதன விகாரைக்குரிய இடமான தொல்லியல் பிரதேசம் என்பதால் அப்பகுதிக்குள் உள்நுழைந்து இந்துமத வழிபாடுகளில் ஈடுபடுவது மற்றும் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆர்ப்பாட்டம் ஏற்படக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு கோரி புல்மோட்டை காவல்துறையினர் திருகோணமலை நீதவான் மன்றில் செய்த விண்ணப்பத்துக்கு ஏற்றவகையில் நீதிமன்றம் மேற்குறித்தவாறு தடை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடத்தில் காவல்துறையினரின் தரப்பு கருத்தை மாத்திரம் கொண்டு மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமையே மக்களின் கவலைக்கு காரணமாகும்.

இதேவேளை அவ்வாறு சிறிலங்கா காவல்துறையினரால் பெறப்பட்ட அந்த தடையுத்தரவில் அப் பகுதியை சேர்ந்த மக்களுக்கும் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னைமரவாடி மக்களுக்கு தொடரும் அநீதி | Continued Injustice To The Tamil People

அந்த வகையில் தென்னைமரவாடி பகுதியைச் சேர்ந்த நான்கு தமிழ் மக்களின் பெயர் குறிப்பிட்டதுடன் அகம் அமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் ஆகிய அனைவரும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106 (01) (3) பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என காவல்துறையினர் தடையுத்தரவை வழங்கினர்.

இத்தகைய செயற்பாடு பொங்கல் நிகழ்வுக்கு வந்த தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

தென்னைமரவாடி என்ற பூர்வீக கிராமம்

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கிளாய் காணப்படுகிறது.

கொக்கிளாய் நீரேரியும் பறையானாறும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றன. இவைகளின் கரையோரமாக தென்னைமரவாடிக்கிராமம் இருக்கின்றது.

தென்னவன் என்ற தமிழ் அரசன் இந்தக் கிராமத்தை ஆண்டதினால் தென்னவன் மரபு வந்த அடி என்பதனால் தென்னைமரவாடி என்ற பெயர் இந்தக் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கிறது, காலம் காலமாக இந்தக் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதுநீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு பூர்வீகக் கிராமம். முன்னொரு காலத்தில் மக்கள் மகிழ்வும் வளமும் கொண்டதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். இக்கிராமத்தின் ஒரு பகுதி மணலாறுடன் தொடர்புபடுகின்றது.

தென்னைமரவாடி மக்களுக்கு தொடரும் அநீதி | Continued Injustice To The Tamil People

மணலாற்றுப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த சிங்களக்காடையர்கள் 1983 மார்கழி 3ஆம் திகதி அன்று இந்தக் கிராமத்தினுள் நுழைந்து இனக்கவலரவங்களை நிகழ்த்தினார்கள்.

14பேர் அந்தக் கவலரத்தில் கொல்லப்பட்டார்கள். மூன்று பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டார்கள், பலர் கடத்திச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்கள், ஈழப் பிரச்சினையில் முதலில் முதனில் இடம்பெயர்ந்த ஒரு கிராமம்தான் தென்னைமரவாடி.

சூரியனுடன் இணையும் புதன்..புத்தாதித்ய யோகத்தால் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

சூரியனுடன் இணையும் புதன்..புத்தாதித்ய யோகத்தால் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 February, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், கனடா, Canada

11 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், வவுனியா

07 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், நல்லூர், கனடா, Canada

09 May, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு கொச்சிக்கடை, Toronto, Canada

05 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

30 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, நொச்சிமோட்டை, Montreal, Canada, Toronto, Canada, Mississauga, Canada

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Muscat, Oman, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, கண்ணாட்டி,, இலுப்பைக்கடவை, London, United Kingdom

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வைரவபுளியங்குளம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024