மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா !

United for Human Rights United Human Rights Human Right Day
By Theepachelvan Dec 09, 2024 07:06 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு உலக மனித உரிமை பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை அங்கீகரித்து பிரகடனம் செய்திருந்தது அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் பத்தாம் திகதி அனைத்துலகம் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் நிலவுகின்ற நிலையில் இந்த மனித உரிமை பிரகடனம் என்பதும் மனித உரிமைகள் தினமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மனிதர்கள் அனைவருக்கும் இனம் நிறம் மதம் பாலினம் மொழி நாடு என்ற வேறுபாடு இன்றி அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது என்பது மனித உரிமைகள் தினத்தின் அடிப்படை நோக்கமாக காணப்படுகிறது ஆனால் மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா? என்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…

இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…

மனித உரிமை என்பது

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான சகலவிதமான உரிமைகளுடனும் வாழ்தலே அடிப்படை உரிமையாகும். ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் மனித உரிமைகள் இருப்புக்கொள்ளுவதற்கான அடிப்படை. ஒவ்வொரு மனிதனுக்குமான அனைத்து உரிமைகளையும் உறுதி செய்வதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம்.

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா ! | Sri Lanka Human Rights Day Article Tamil

அப்படிப் பார்க்கையில், நாம் நமக்கான வாழ்வைத்தான் வாழ்கிறோமா? இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில், சிங்களப் பேரினவாத அரசின் கீழ் நாம் ஒடுங்கியும் அடங்கியும் வாழ வேண்டும் என ஆள்பவர்கள் நினைக்கின்றனர். இதுதான் யதார்த்தமான நிலை. நாம் பிறந்த மண்ணில் நமது உரிமைகளுடன் வாழ முடியவில்லை. எமது உரிமைகளுடன் எம்மை வாழவிடாமல் தடுப்பதுவே இங்கே நிகழ்கிறது.

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

மருந்துக்கும் இல்லாத மனித உரிமை

எம்முடைய நிலத்தில் நாம் வாழ முடியாது. நம்முடைய அடையாளங்களுடன் நாம் வாழ முடியாது. நாம் நாமாக வாழ முடியாது. நம்முடைய வரலாற்றைப் படிக்க முடியாது. நம்முடைய வரலாற்றை பேச முடியாது. இழந்த உரிமைகளைப் பற்றி பேசவும் அதனைக் கோரவும் முடியாது. உலகமயமாதல் சூழலில் உலகின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற, அல்லது தட்டிக் கேட்கக்கூடிய காலம் ஒன்றிலேயே நாம் பலவந்தமாக இனவழிப்புக்குள் அமிழ்த்தப்படுகிறோம். அப்படியெனில் இலங்கையில் மனித உரிமை என்பது மருந்திற்கும் இல்லாத நாடல்லவா? இந்த அதிர்ச்சி இவ் உலகத்தினர் எவரையும் உறுத்தவில்லை என்பதுதான் உலகின் தீராத வியப்பாயிருக்கிறது.

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா ! | Sri Lanka Human Rights Day Article Tamil

மனிதர்களும் எல்லோருமட் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றே ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் மனித உரிமைப் பிரகடனம் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு வழங்கப்பட்ட நீதியைப் பற்றி இன்றைய நாளில் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

மனித உரிமை மீறல்கள் 

இலங்கையில் மனித உரிமை மீறல்களின் ஆரம்ப நிலையோ மிகவும் கொடூரமானது. உண்மையில் அதன் அடிப்படையே இன மேலாதிக்கம்தான். சக மனிதர்கள்மீதான ஒடுக்குமுறை பாரிய குற்றமாக உலகில் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கிடையிலான சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை, சிறுவர்கள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மீறல்கள் குறித்தெல்லாம் உலகில் நன்றாகப் பேசப்படுகின்றது. மனித உரிமை அவைகளை நடாத்துவதற்கும் வருடாந்தம் அவைகள் பற்றி உரையாற்றுவதற்கும் உலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்வதற்குமான தேவைகளும் உள்ளடங்களுங்களும் உலகில் தொடர்ந்தும் வாய்த்து வருகின்றன. 

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா ! | Sri Lanka Human Rights Day Article Tamil

ஆனால் மெய்யாகவே அந்த மீறல்களை தடுக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உலகில் உள்ள நாடுகளின் அரசுகள்மீது பணிப்பதற்குத்தான் இயலாமல் இருக்கின்றன. இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் இன்னொரு பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றது. இது இன உரிமை மீறல். இது இன உரிமை மறுப்பு. ஆனால் இதனை ஒரு மனித உரிமை மீறல் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே 30 ஆண்டுகள் இந்த உலகிற்கு தேவைப்பட்டுள்ளன என்றால் இந்த உலகம் எவ்வளவு ஆபத்தமானது? பல இலட்சம் மக்களின் உயிர்களை காவு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டது என்பது எவ்வளவு கொடூரமான விசயம். ஒரு கொடும்போரின் இறுதி நாட்களில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டதே?

பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

ருவாண்டா இனப்படுகொலை

 ஈழத்தில் மாத்திரமல்ல, ருவாண்டா இனப்படுகொலை, குர்து இனப்படுகொலை, ஆர்மோனியன் இனப்படுகொலை என்று உலகில் நிகழ்ந்தேறிய எல்லா இனப்படுகொலைகளின் போதும் மனித உரிமை என்ற வார்த்தைகள் சாதாரணமாககூட உபயோகிக்கப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்படவில்லை. அதனை மனித உரிமை மீறல்களாக ஏற்றுக்கொள்ளவும், இனப்படுகொலைகளாக ஏற்றுக்கொள்ளவும் வெகுகாலம் எடுத்தது. இந்த மக்களின் இனப்படுகொலைக் கல்லறைகள்மீது வெள்ளையும் அடிக்கப்பட்டது. உலகின் அரசியல் தேவைகளின் பிரகாரங்களின்படியே தீர்ப்புக்கள் காலம் தாழ்ந்து கிடைத்தன.

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா ! | Sri Lanka Human Rights Day Article Tamil

இலங்கை விடயத்தில் ஐ.நா மிகவும் தோற்றுப் போயிருந்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள், இந்நாள் செயலாளர் நாயகங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். காலம் கடந்த இந்த ஒப்புதல்களும் வருத்தங்களும் இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவறியிருக்கின்றன. இராண்டாம் உலகப் போரின் பேரழிவின் பின்னர், உலகின் வல்லரசு நாடுகளின் பாதுகாப்பைத்தான் இத்தகைய தினங்கள் உறுதிப்படுத்த முயலுகின்றனவா? ஒடுக்கப்பட்ட இனங்களும் சிறுபான்மை இனங்களும் உலகின் ஆதிக்க நாடுகளினாலும், அதன் அரசியல் கூட்டு நாடுகளினாலும் உரிமை இழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

ஈழத்தில் இனப்படுகொலை  

இலங்கைத் தீவில் தொடரும் இன உரிமையும் இப்படி ஒரு கணக்கிலேயே தொடர்கின்றது. ஒரு சிறு இனத்தின் பல்லாயிரம் போராளிகள் ஆயுதம் ஏந்தி மாண்டுபோனதின் அரசியல் நியாயத்தின் உண்மையை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. உலகெங்கும் அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.தன்னுடைய மொழியை, தன்னுடைய நிலத்தை, தன்னுடைய அடையாளத்தை, தன் சக மனிதர்களை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிற நிலமை வருகின்றது எனில் அங்கு மனித உரிமை மீறல் என்பது எந்தளவுக்கு முற்றிப் போன பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதை வல்லுனர்கள் அறியாதவர்களல்ல. இத்தகைய தினங்களை பிரகடனப்படுத்திய அமைப்புக்களின் கணக்குகளில் ஏன் இவை உள்ளடங்கவில்லை? 

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா ! | Sri Lanka Human Rights Day Article Tamil

ஈழத்தில் மிகக் கொடிய இனப்படுகொலை நடைபெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. போரில் படு பயங்கரமாக ஒரு இன அழிப்பின் அத்தனை நோக்குகளுடனும் கொல்லப்பட்ட மக்கள் குறித்து எந்த நீதியும் இல்லை.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா !

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா !

காகிதத்தில் மாத்திரம் பேணப்படுகிறதா?

ஒரு மனிதரின் உரிமை குறித்துப் பேசும் சாசனங்கள், ஒரு இனத்தின் பகுதியினரே இல்லாமல் போயிருப்பதை குறித்து பேசாமல் இருப்பது ஏன்? அவர்கள் மிகவும் கொடூரமான வழிகளில் கொல்லப்பட்டமை குறித்தும் காணாமல் ஆக்கபட்டமை குறித்தும் அவர்களின் வாழ் நிலங்கள் பறிக்கப்பட்டமை குறித்தும் பேசாதிருப்பது ஏன்? உலகின் இந்த வஞ்சகங்களிற்கும் இலங்கையில் காணப்படும் இனப் பாரபட்சங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை போன்றவை இந்த உரிமை மீறல்களை ஊக்குவிக்கின்றன. இத்தனை உலகப் பேரழிவுகளின் பின்னரும் தரவுகளை மதிப்படும் ஒரு சபையாக, ஈற்றில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா தேவை தானா?

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா ! | Sri Lanka Human Rights Day Article Tamil

எங்களுக்கு நேர்ந்த இந்தக் கதி உலகில் எந்த இனத்திற்கும் நேரக்கூடாது. உலகில் உள்ள மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். எந்த இனமும் எங்களைப் போல அழிந்துபோகக் கூடாது. ஒடுக்கப்படக்கூடாது. அரசெனப்படுவது மக்களை பாதுகாக்கவும், அந்த மக்களை இறைமையைப் பெற்று ஆள்வதுமாக இருக்க வேண்டும். எங்கள் இழப்பும் சிந்திய குருதியும் உலகில் எவரும் இக் கதி ஏற்படாத நிலையொன்றை வலுவாக்க புதிய மனித உரிமை சாசனம் எழுதப்பட வேண்டும். வெறுமனே காகிதத்தில் மாத்திரம் இந்த தினம் நினைவு கூறப்படுவதில் அர்த்தம் இல்லை. உலகமெங்கும் ஏதோ ஒரு வகையில் கொடுக்கும் முறைகளும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. உலகின் அனைத்து மக்களது மனித உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். இதனை கடந்த காலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை சந்தித்த ஈழத்தமிழ் மக்கள் வலியுறுத்த வேண்டிய பொறுப்பினை கொண்டிருக்கிறார்கள்.   

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 December, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
அகாலமரணம்

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, Mönchengladbach, Germany

18 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, அன்புவழிபுரம், Toronto, Canada

21 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
மரண அறிவித்தல்

மயிலிட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

19 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நுணாவில் மேற்கு

19 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், பிரான்ஸ், France

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கொழும்பு

16 Jan, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொலோன், Germany

03 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, நீர்கொழும்பு

21 Jan, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Caterham, United Kingdom

11 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், வேலணை 3ம் வட்டாரம்

17 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

15 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

09 Feb, 2015
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

விசுவமடு, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, வண்ணார்பண்ணை, தாவடி, Scarborough, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்