தென்னிலங்கையில் தொடரும் அனர்த்தம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Weather
People
Kalutara
SriLanka
By Chanakyan
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த மற்றும் பாளிந்தநுவர பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு. பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் சீரற்ற கால நிலை காரமாக இரு வேறுஇடங்களில் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமை சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு,வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி