பயங்கரவாத சட்டத்தை நீக்ககோரி தொடரும் கையெழுத்து வேட்டை (படங்கள்)
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி பல பிரதேசங்களிலும் கையெழுத்துப் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வவுனியாவின் இலுப்பையடி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, கனகராயன்குளம் மற்றும் செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களிலும் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
இந்த கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், மற்றும் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியின் வாலிபன் முன்னணி தலைவர் கி.சேயோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
