வவுனியாவை உலுக்கிய குடும்பஸ்தரின் மரணம்: ஐவர் அதிரடி கைது
வவுனியாவில் சர்ச்சைக்குரிய விதத்தில் நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.
போக்குவரத்து காவல்துறை
இதன்போது அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து காவல்துறையினரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற காவல்துறையினர் மீது அப்பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஐந்து காவல்துறையினர் காயமடைந்ததுடன் காவல்துறையினரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
அரச சொத்து
இச்சம்பவத்திலா அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் பின் மேலும் ஐவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
