ஒரு துண்டு நிலத்தையும் மீள கையளிக்க மாட்டேன்! தையிட்டி விகாராதிபதியின் கருத்தால் சர்ச்சை

Sonnalum Kuttram
By Theepan Feb 19, 2026 11:14 AM GMT
Report

சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் கூட்டம் நீண்ட இழுபறியுடன் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த கூட்டம் மிக விரைவில் கூட இருப்பதாக அறிய முடிகிறது.

ஆசாமியால் வீதிக்கு வந்த அரசியல்வாதி...

ஆசாமியால் வீதிக்கு வந்த அரசியல்வாதி...

உரிமையாளர்களின் குற்றச்சாட்டு

தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் காணிகளின் உறுதிகளை விகாரை பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என வரும் சகல தரப்பினருக்கும் வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் விகாரை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு குழுவிடமும் தங்கள் காணி உறுதியை வழங்கியுள்ளோம்.

ஆனால் , விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக கூறி அவர்கள் இதுவரை பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

அந்த கலந்துரையாடல் எவற்றுக்கும் எம்மை அழைக்கவில்லை. விகாரதிபதியை மாத்திரம் அழைத்து கலந்துரையாடுகின்றனர். இது ஒரு பக்க சார்பான நடவடிக்கை என்பது அப்பட்டமானது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக கொழும்பில் கூடி கலந்துரையாடுகின்றனர்.

அங்கு என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் எமக்கோ , ஊடகங்களுக்கோ எவரும் தெரிவிப்பதில்லை.

இரகசிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடுகின்றனர்.

கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ , கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே சொல்லாது , இரகசியமாகவே கலந்துரையாடுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு இரகசியமாக கலந்துரையாடி தாமே தீர்மானங்களை எடுத்த பின்னர் , அதனை எங்கள் மீது திணிக்க போகின்றார்களோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு நிரந்தர விசாரணை அறிவிப்பு மட்டும் வருகிறது… வருகிறது…

உயிர்த்த ஞாயிறு நிரந்தர விசாரணை அறிவிப்பு மட்டும் வருகிறது… வருகிறது…

தவறான செய்தி

தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும், அதற்கு முதல் கட்டமாக ஒரு தொகுதி காணியை விடுவிக்கும் முகமாக விகாரையை சுற்றியுள்ள பகுதியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன.

அது தவறான செய்தி எனவும், வேலியை பின் நகர்த்துவதற்கு என தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்கவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

தையிட்டி விகாரை வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி கிடைத்து உள்ளதாகவும் , வேலியை பின் நகர்த்தி அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டியவருக்கு வழங்க வேண்டும் என பிரதேச சபை தவிசாளர் ஒருவர் பிரதேச செயலரிடம் வலியுறுத்தி வந்ததாகவும் , தவிசாளர் ஒருவர் அவ்வாறான ஒப்பந்தத்தை பெறுவது ஊழல் எனவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் , தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சில சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026