தேசிய பாடசாலைகள் விவகாரம் : கோபா குழுவில் வெளியான தகவல்
809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த பாடசாலைகளின் பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கோபா (COPA) குழுவில் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்த 809 பாடசாலைகளும் பெயரளவில் மட்டுமே தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரிந்துரை
கல்வி அமைச்சின் (Ministry of Education) அதிகாரிகள் சமீபத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய முன்னிலையான போதே இந்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் போது செயற்படுத்தப்பட்ட தேசிய பாடசாலை எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்கும் திட்டம் மற்றும் இராஜாங்க அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட 72 திட்டங்கள் தொடர்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
