கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவுடன் மக்கள் செய்யும் செயல் -வெளியான புதிய தகவல்
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர், ஏனையோரின் நன்மை கருதி சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டுமெனவும் மாறாக தொலைபேசியை செயலிழக்க செய்யக் கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட் – 19 தொற்று தொடர்பிலான சுகாதார அமைச்சின் பிரதம இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுமக்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாமையே, கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க தாமதமடைவதற்கான காரணமாக அமைந்துள்ளது.
தான் ஒரு கொவிட் தொற்றாளர் என்றால், தன்னைச் சார்ந்தவர்கள் மீது அன்பு கொண்டு, அவர் சிகிச்சைகளுக்காக செல்லவேண்டும். ஒரு பகுதியில் 10 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அந்த 10 பேரை அழைத்துச் செல்ல பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சிலர் தமக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்துகொண்டதன் பின்னர், தமது தொலைபேசியை செயலிழக்க செய்து விடுகின்றனர்.
80 வீதமானோர் அவ்வாறான செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.