நாளாந்தம் அதிகரித்து செல்லும் கொரோனா மரணங்கள்
Srilanka
Corona
Death
Covid-19
Recovered
increase
By MKkamshan
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை15,808 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,150 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 628,116 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290 பேராக அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,028 ஆக அதிகரித்துள்ளது.
