முடக்க நிலையை தளர்த்தினால் ஆபத்து - எச்சரிக்கையுடன் வெளிவந்த சர்வதேச அறிக்கை
srilanka
covid19
corona
lockdown
peoples
By S P Thas
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையில் முடக்க தளர்த்தப்படட்ட பின்னர் மரணங்களின் எண்ணிக்கை 16,700 வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மூடப்பட்ட காலகட்டத்தில் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் 1.1 பில்லியன் டொலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 வீதம் என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
எனினும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை முடக்கநிலையை நீடிப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை 13,712 ஆகக் குறைக்க முடியும். ஆனால் 1.67 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு கணித்துள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி