ஆளும் தரப்பு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட குடும்பத்திற்கு தொற்றியது கொவிட்
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன (Kokila Harshani Gunawardena) கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் மற்றும் மகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோகிலா ஹர்ஷனி கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை எனவே நாடாளுமன்றத்தில் எவருக்கும் அவர் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இல்லை.
இதேவேளை இரண்டு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்