இலங்கைவரும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி!
Covid-19
Sri Lanka
Corona Virus
Corona Vaccine
By Vasanth
இலங்கையில், வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ராப் ஹய்டாரி தான் இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இன்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார்.
சுகாதார முன்னரங்கப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிக ஆபத்தான வலயங்களைச் சேர்ந்த மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.