எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை -இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
தடுப்பூசி வழங்கப்படாது என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கொரோனா வைரஸுக்கு எதிராக அனைவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டிலிருந்து தேவையான தடுப்பூசிகளின் பங்குகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது டோஸ் கொடுக்க பல நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாகவும், தடுப்பூசி வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படலாம் என்றும் கூறினார்.
இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து ஒரு மில்லியன் மற்றும் மூன்று மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அடுத்த சில நாட்களில் 900,000 டோஸ் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் இலங்கையில் 900,000 டோஸ் பைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
ஃபைசர் தடுப்பூசிக்கு ஒரே ஒரு டோஸ் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் இராணுவத்தளபதி கூறினார்.