ஏறாவூர் நகர சபையின் ஊழல் - நடந்தது என்ன..!

Sri Lanka Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Kiruththikan Apr 27, 2023 12:49 PM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

குப்பை கொட்டுவதற்காக என்று கூறி ஏறாவூர் நகர சபை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தனியார் காணி கொள்வனவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் ஏறாவூர் நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக என்று கூறி 04 ஏக்கர் காணியை ரூபா 87 இலட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியை பிரபல காணி வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஏறாவூர் நகர சபை நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளதாகவும், குறித்த காணிக்கு ரூபா. 27 இலட்சம் விலைக் கழிவு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காணியின் உரிமை தொடர்பில் சர்ச்சைகள்

ஏறாவூர் நகர சபையின் ஊழல் - நடந்தது என்ன..! | Corruption In The Purchase Of Dump Land

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவிற்குள் தமிழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மேற்படி காணியானது தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்றும் ஆனால் குறித்த காணியின் உரிமை யாருக்கு என்பது தொடர்பாக பல வருடங்களாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குறித்த காணிக்கு எதிராக ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 02.02.2023ம் திகதி தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கைக் கடிதம் அனுப்பியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் அனுப்பாமல் அவசர அவசரமாக ஏறாவூர் நகரசபைக்கு இக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இக் காணிக்கு உரிமை கோரும் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், போலி ஆவணங்களை தயாரித்து மேற்படி காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படி காணி தொடர்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரும் ஏறாவூர் காவல்துறையில் புகார் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேற்படி காணிக்கு போலி ஆவணம்

ஏறாவூர் நகர சபையின் ஊழல் - நடந்தது என்ன..! | Corruption In The Purchase Of Dump Land

ஏறாவூர் பற்று பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள மேற்படி காணிக்கு நபர் ஒருவர் போலியான ஆவணங்களை வழங்கி ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகத்திடம் 16.10.2021ம் அன்று இந்தக் காணிக்கு பாதை போடுவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

பின்னர் வேறு ஒரு இடத்தை காட்டி மேற்படி காணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதை அறிந்த ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகம் இக் காணிக்குள் நடைபெற்ற பாதை அமைக்கும் பணியை நிறுத்துமாறு கோரியதுடன், ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர் உடன் களவிஜயம் மேற்கொண்டு பாதை இடுவதை தடுத்து நிறுத்தி சட்டவிரோதமாக பெறப்பட்ட அனுமதியை இரத்துச் செய்து அது விடயமாக ஏறாவூர் காவல்துறை நிலையத்தில் அன்றைய தினமே (2021.10.16) CIB 2267/184 என்ற இலக்கத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் மேற்படி காணி தங்களுடைய காணி எனக் கூறி தமிழ் மக்கள் சிலர் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஏறாவூர் நகர சபையின் ஊழல் - நடந்தது என்ன..! | Corruption In The Purchase Of Dump Land

இந் நிலையில் அவசர அவசரமாக அதுவும் பிரதேச சபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மேற்படி காணியை யாருடைய அனுமதியின் கீழ் இக் காணி கொள்வனவு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது ?

மேற்படி காணி கொள்வனவு பிரதேச சபை சட்டங்களை, சுற்று நிருபங்களை பின்பற்றாது குறிப்பிட்ட சில நபர்களின் தன்னிச்சையான முடிவு மற்றும் இலாப நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

1. இக் காணியை கொள்வனவு செய்யும் போது காணிக்குரிய ஆவணங்கள் சரியான ஆவணங்களா என எந்தச் சட்டதரணி மூலம் பரிசீலிக்கப்படவில்லை.

2. ஒரு அரச நிறுவனத்தின் தேவைக்காக கொள்முதல் செய்யப்படும் காணியை அளவீடு செய்வதற்கு அரச நிள அளளையார் திணைக்களத்தின் மூலமே அளவீடு செய்ய வேண்டும். ஆனால் இந்தக் காணி கொள்முதல் செய்யும் விடயத்தில் தனியார் நில அளவையாளரைக் கொண்டு நில அளவை படம் வரையப்பட்டுள்ளது.

3. இந்த நில அளவை செய்யும் படத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நபர் காணி உரிமையாளராக இருக்கவேண்டும். ஆனால் இந்தப் படத்தில் ? பிரதேசசபை பதவி நிலை உத்தியோகத்தரால் Point Out செய்யப்பட்டுள்ளது.

4. இந்த நில அளவைப் படத்தில் காணியின் உரிமையாளர் சம்பந்தமாக எதுவும் கூறப்படவில்லை.

5. சபை கலைக்கப்பட்டு விசேட ஆணையாளாரின் கீழ் சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள காலப்பகுதியில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்து காணி கொள்முதல் செய்ய செயலாளருக்கு யார் அனுமதி வழங்கியது என்ற கேள்விகள் எழுகிறது?

மக்களின் பெருந்தொகை வரிப்பணத்தை கையாண்டமை மற்றும் இலாப நோக்கத்திற்காக முறையற்ற சர்ச்சைக்குரிய காணியை பெருந்தொகை நிதி கொடுத்து கொள்வனவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் மேற்படி காணி கொள்வனவில் இடம் பெற்றிருக்கலாம் என்பதால் இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏறாவூர் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016