தம்பிலுவிலுக்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர்!

Ampara Pillayan Sri Lanka Police Investigation
By Dharu Aug 01, 2025 08:56 AM GMT
Report

தம்பிலுவில் பொது மயானத்தில்  விசேட சோதனை நடவடிக்கைகள் குற்றப்பலனாய்வுப்பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜுட் எனும் சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 நபரொருவரை கொலை செய்து அப்பகுதியில் புதைத்துள்ளதாகத்தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள்! அதிர்ச்சியளிக்கும் உலுகேதென்னவின் வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள்! அதிர்ச்சியளிக்கும் உலுகேதென்னவின் வாக்குமூலம்

அடையாளங்காணப்பட்ட பல இடங்கள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானம் இவ்வாறு ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளங்காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளது.

தம்பிலுவிலுக்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர்! | Corruption Of Pillayan S Team Is Coming To Light

இதன் போது, மட்டக்களப்பு சிறைச்சாலையில் மற்றுமொரு வழங்கில் தனது தாயைக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருபவரும் கடந்த 2005ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாகச்செயற்பட்ட அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் ஜுட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மைதானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரபப்ட்டிருந்தார்.

மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக்கொண்ட அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராகச் செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வுப்பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதற்கமைய குறித்த பொது மைதானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் உத்தரவிற்கமைய குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.

இதன்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி எஸ்.எம்.றியாஸ் உட்பட் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் எனப்பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள்! அதிர்ச்சியளிக்கும் உலுகேதென்னவின் வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள்! அதிர்ச்சியளிக்கும் உலுகேதென்னவின் வாக்குமூலம்

இனிய பாரதி 

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இனிய பாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நெருங்கிச்செயற்பட்ட ஒருவராவார்.

கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல இடங்கள் அடையாளங்காணபபட்டுள்ள நிலையில், பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பிலுவிலுக்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர்! | Corruption Of Pillayan S Team Is Coming To Light

2007ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இனியபாரதி மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த ஜூலை 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதிகளில் வைத்து குற்றப்புலனாய்வுப் யினரால் கைது செய்யப்பட்டனர்.

இக்கைதைத்தொடர்ந்து, இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச்சேர்ந்த 'தொப்பி மனாப்' என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச்சேர்ந்த 'ஜுட்' என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025