இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானியர்கள்!
அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட பின்னர் இலங்கையில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று இரவு (14) ஒரு சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற சிறப்பு விமானம், நேற்றையதினம்(14) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அதனைத் தொடர்ந்து, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 206 ஈரானியர்களும், கொக்கல தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 38 ஈரானியர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்தக் குழுவினரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், நேற்று இரவு சுமார் 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானுக்கு புறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 8 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்