மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையமொன்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (23-06-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள்
இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர், குறித்த வடை தயாரிப்பு நிலையத்தில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த நிலையத்தில் உணவுப் பொருட்கள் மனித பயன்பாட்டிற்கு ஒவ்வாத வகையிலும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக உணவு தயாரிக்கும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளன.
கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் சுகாதாரப் பாதுகாப்பின்றித் தேங்கியிருந்ததுடன் கோழிகள், புறாக்கள் மற்றும் ஏனைய செல்லப்பிராணிகளின் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரித்தமை, உணவு தயாரிக்கும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் மிகவும் மோசமாகக் காணப்பட்டமை போன்ற குறைபாடுகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆய்வு நடவடிக்கை
இதனடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உரிமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
சுகாதாரத்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து இடத்தை சுத்தப்படுத்திச் சுகாதாரமான முறையில் மீள் அனுமதி பெறும் வரை நிலையத்தை இயங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதேநேரம் மன்னார் நகரப்குதியில் கடந்த 6 மாதங்களில் 128 உணவகங்கள், வெதுப்பகங்கள் உள்ளடங்கலாகச் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய நிறுவனங்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த உணவகங்கள் 1,892,300 ரூபா தண்டப்பணமும் செலுத்தியுள்ளன.
இந்தத் திடீர் ஆய்வு நடவடிக்கைக்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 8 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்