பற்றி எரியும் கப்பல்கள் - பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்
கடந்த நான்கு நாட்களில் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய நான்காவது தாக்குதலில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிரிவு (SOUTHCOM) இதனைத் தெரிவித்துள்ளது.
ஏவுகணையால் தாக்கப்பட்டு படகு மாபெரும் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறுவதைக் காட்டும் காணொளியையும் வெளியிட்டிருந்தது.
இராணுவ நடவடிக்கை
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சவுத்காம் கொல்லப்பட்ட நான்கு பேரும் போதைப்பொருள் பயங்கரவாதிகள் (narco-terrorists) என தெரிவித்துள்ளது.

கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் சர்வதேச கடல் பகுதியில் கப்பல்களில் இருந்தவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டதையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 175 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களைக் கடத்தும் லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கும்பல்களைத் தடுப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |