போலி நாணயத்தாள்கள் உட்பட போதைப்பொருட்களுடன் சிக்கிய சந்தேகநபர்கள்!
இலங்கையில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நேற்றையதினம் (25.04) நடத்தப்பட்ட இரு வேறுபட்ட சுற்றிவளைப்புகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசைபிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில் முன்னெடுத்த முதலாம் சோதனையில், 91 கிராம் 200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இரண்டு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும், இருபத்தியொரு 2,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
25 முதல் 52 வயதுக்கு இடைப்பட்ட இந்த சந்தேக நபர்கள் இம்புல்கொட, தெஹிபிட்டிய, பெலந்த மற்றும் இரத்மலானை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் கல்கிசை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அன்றைய தினமே கொஹுவலை காவல்துறையினரால் தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், வெல்லவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஐந்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும், முப்பத்தியெட்டு 2,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்