ஈரானின் எரிபொருளை வாங்க தயக்கம் காட்டும் நாடுகள் : காரணத்தை வெளியிட்ட அமெரிக்கா
வோஷிங்டன் மீண்டும் தடைகளை விதிக்கக்கூடும் என்ற அபாயம் காரணமாக மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும் நிலையில், ஈரானிய எண்ணெயின் ஒரே வாங்குபவராக சீனா மட்டுமே நீடிக்கிறது என்று அமெரிக்க திறைசேரிச் செயலர் ஸ்கொட் பெசென்ட் செவ்வாயன்று கூறினார்.
பொக்ஸ் நியூஸிடம் பேசிய பெசென்ட், ஈரானிய கச்சா எண்ணெய் மீண்டும் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகுமா என்ற நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், பெரும்பாலான சாத்தியமான வாங்குபவர்கள் அதனை வாங்கத் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார்.
"மீண்டும் தடை விதிக்கப்படுமா என்ற அச்சத்தில் வாங்குபவர்கள் இருப்பதால், ஈரானியர்களால் இதுவரை தங்கள் எண்ணெயை விற்க முடியவில்லை," என்று பெசென்ட் கூறினார்.
மீண்டும் தடை விதிக்கப்படும் என்ற அச்சம்
தடைகளின் கீழ் இருந்தபோதே ஈரானிய எண்ணெயை வாங்கிக்கொண்டிருந்த சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கவில்லை என்றும், அதனால் அது "இன்னும் தள்ளுபடி விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |