நாட்டில் தற்போது காட்டாட்சியே நடக்கின்றது - திஸ்ஸ அத்தநாயக்க
நாட்டில் தற்போது நடப்பது காட்டாட்சியே என்பதை வடக்கு, கிழக்கில் நேற்று அரச படைகள் நடந்துகொண்ட விதம் எடுத்துக்காட்டுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்கள் தொட்டர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போரில் இறந்தவர்களை அமைதியாக நினைவேந்த பல இடங்களில் நீதிமன்றமே அனுமதி வழங்கியது.
இந்நிலையில் அதையும் மீறி இராணுவத்தினருடன் சேர்ந்து காவல் துறையினர் நடந்த கொண்ட விதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் ,மொழி ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் அவர்களை உள ரீதியில் மேலும் காயப்படுத்தக்கூடாது என மேலும் தெரிவித்துள்ளார்.