தென்னாபிரிக்காவிற்கு முன்பே ஒமிக்ரோன் பரவிய நாடு
தென்னாபிரிக்காவிற்கு முன்பே நெதர்லாந்தில் ஒமிக்ரோன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24ஆம் திகதி தென் னாபிரிக்காவில் முதல் முறையாக ஒமிக்ரோன் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்தில் நவம்பர் 19 மற்றும் 23ஆம் திகதி கொரோனா சாம்பிள் சேகரிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு ஒமிக்ரோன் தொற்று இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து மட்டுமன்றி, பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியிலும், தென் னாபிரிக்காவிற்கு முன்பே ஒமிக்ரோன் வகை கொரோனா பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒமிக்ரோன் வகை கொரோனாவால் உயிரிழப்புகள் நேராத போதும், ஒமிக்ரோன் தொற்று பரவும் தன்மை, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை அது மீண்டும் தாக்குமா? என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.