நீதிமன்ற பெண் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Drugs
By Sumithiran
மதவாச்சி நீதவான் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் இன்று(28) மாலை நாற்பது போதைப்பொருள் மாத்திரைகளுடன் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொன்வேவ, உபுல்தெனியவைச் சேர்ந்த முப்பத்தொன்பது வயதுடைய பெண் ஆவார்.
மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணி
இந்த பெண் மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதாக மிஹிந்தலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுடன் பலர் கைது செய்யப்படகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
