நீதிமன்றில் தந்தை சாட்சியமளிப்பதை காணொளி எடுத்த மகளுக்கு நேர்ந்த கதி
தனது தந்தை நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்ததற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட மகளுக்கு கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம இன்று (பெப்ரவரி 24) ரூ.10,000 அபராதம் விதித்தார்.
கொழும்பை வசிப்பிடமாக கொண்ட அந்த யுவதி, கொழும்பு எண். 2 மேல் நீதிபதி நீதிமன்றத்தில் தனது தந்தை சாட்சியமளிப்பதை தனது மொபைல் போனில் படம் பிடித்ததாக காவல்துறை தெரிவித்ததை அடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி
நீதிமன்றக் கடமையில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, சம்பவத்தைக் கவனித்து, சந்தேக நபரின் மொபைல் போனைக் கைப்பற்றி, கெசல்வத்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்தக் காட்சிகள் அனுமதியின்றி பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அபராதத்துடன் கூடிய எச்சரிக்கை
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அபராதம் விதிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு நீதிபதி அவரை எச்சரித்தார், மேலும் அந்த காணொளி காட்சிகளை அவரது தொலைபேசியிலிருந்து நீக்கவும் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |