பகிரங்கப்படுத்தப்படவுள்ள தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணம்
இலங்கையின் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, முத்திரையிடப்பட்ட அறிக்கையை பெற்றுக் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணை
மேலும், தினேஷ் ஷாப்டரின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், நிபுணர் அறிக்கையைப் பெற்ற பின்னர் தமது சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்குமாறும் மன்றிடம் கோரப்பட்டது.

எனினும், இந்த கோரிக்கையை நிராகரித்த மேலதிக நீதவான், இவ்வாறான விசாரணையில் வெளி தரப்பினர் சாட்சியமளிக்க சட்டத்தில் இடமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதவான் உத்தரவு
இதன்படி, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தினேஷ் ஷாப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சடலத்தை ஜாவத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டம் : அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்