பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை ஏற்க முடியாது : பிரசன்ன ரணதுங்க

Sri Lanka Economic Crisis Prasanna Ranatunga Rajapaksa Family
By Beulah Nov 18, 2023 02:54 PM GMT
Report

வரையறுக்கப்பட்ட நிலைக்கு அப்பாற்பட்டு நீதிமன்றம் செல்லவில்லை. இதனால் தான் பொருளாதார பாதிப்பு தொடர்பில் ஆராய தெரிவுக்குழுவை கோருகிறோம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(18) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் : அமைச்சரின் பரபரப்பு பேச்சு

இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் : அமைச்சரின் பரபரப்பு பேச்சு

பொருளாதாரப் பாதிப்புக்கு யார் காரணம்

பொருளாதாரப் பாதிப்புக்கு யார் காரணம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் பிரசாரம் செய்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை ஏற்க முடியாது : பிரசன்ன ரணதுங்க | Court Verdict Cannot Make Rajapaksas Criminals

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தவறாக சித்தரிக்கிறார்கள். சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்களை மறந்து விட்டு செயற்படுவது கவலைக்குரியது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டு பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட முடியாது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கொண்டே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரையறுக்கப்பட்ட நிலைக்கு அப்பாற்பட்டு நீதிமன்றம் செல்லவில்லை. இதனால் தான் பொருளாதார பாதிப்புக்கு தெரிவுக்குழுவை கோருகிறோம்.

பொருளாதார பாதிப்புக்கான காரணிகள் நீதிமன்றத்தில் முழுமையாக ஆராயப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

வரவு - செலவு திட்டம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை ஏற்க முடியாது : பிரசன்ன ரணதுங்க | Court Verdict Cannot Make Rajapaksas Criminals

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பல முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை, என்று விமர்சிக்கிறார்கள்.

குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளார்கள். பொருளாதார பாதிப்புக்கு 69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தீர்வு காணவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாரிய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரிடம் வலிறுத்தினார்.

ஆனால் அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்தார். நாட்டுக்காகவே நாங்கள் மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தோம்.

நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நாட்டுக்காகவே ஒன்றிணைந்து செயற்படுகிறோம் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியினரின் கருத்து

பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை ஏற்க முடியாது : பிரசன்ன ரணதுங்க | Court Verdict Cannot Make Rajapaksas Criminals

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களுடனும் தொடர்புக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதார பாதிப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போலியான போராட்டத்தை தோற்றுவித்தார்கள்.

போராட்டத்தின் ஊடாக பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என வலியுறுத்தியுள்ளார்.

களனி விகாரையில் பாவ மன்னிப்பு

களனி விகாரையில் பாவ மன்னிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் - திருவிழா

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025