130 கர்ப்பிணிகளுக்கு கொவிட் உறுதி - இருவரின் நிலை கவலைக்கிடம்!!
covid
sri lanka
patient
pregnant
By Vanan
கொரோனா தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளான அதிகமான கர்ப்பிணிகள் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், இயலுமானவரை வீட்டில் இருந்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கர்பிணிகளுக்கு குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்