அதிகரிக்கும் கொரோனா! அரச சார்பற்ற நிறுவனங்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக உயர் ஓட்டம் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது.
இந்த விடயத்தை அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் நன்மைக் கருதி அத்தகைய அலகுகளை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்படும், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளுக்கு இதுபோன்ற இயந்திரங்கள் அவசரமாக தேவைப்படுவது குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ச ஆகியோர் தமக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களும் தன்னார்வ சமூக சேவை அமைப்புகளும் இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் உதவ வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.