கொரோனாவுக்கு மேலும் 42 பேர் பலி
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
25 ஆண்களும், 17 பெண்களும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.