தடுப்பூசி போடாதவர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு செல்லத் தடை
30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் நுழைய நேற்று (15) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
COVID-19 ஐத் தடுப்பதற்கான அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி எடுப்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். தடுப்பூசி போடப்படாத மக்கள் மற்றும் தடுப்பூசி அட்டைகள் இல்லாமல் இரண்டு நகரங்களுக்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்கு தடுப்பூசி போடாத மக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்கும் நபர்களுக்கு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியிலும், அத்தியாவசிய கடமைகளை செய்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அட்டை இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
பண்டாரவளை நகரில் பெருமளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.