தாண்டவம் ஆடிய ரோஹித் - கில் - பின்வாங்கும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அதிரடியான ஆட்டம் மூலம் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
2 மாற்றங்கள்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வோஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து அணி
ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஜேகப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.
215 ஓட்டங்கள்
ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதம் கடக்க அவரை தொடர்ந்து ஷுப்மன் கில் 72 பந்துகளில் சதம் கடந்தார்.
ஒருநாள் போட்டிகலில் ரோஹித் சர்மாவின் 30 ஆவது சதம் இதுவாகும்.குறித்த போட்டியில் இருவரும் 215 ஓட்டங்களை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.