எரிவாயு கொள்வனவில் எழுந்துள்ள புதிய சிக்கல்: வெளியாகியுள்ள காரணம்
ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவை 96 டொலர்
ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் இலங்கைக்கு எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக ஓமன் வர்த்தக நிறுவனத்திற்கும் தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திற்கும் இடையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனைத்து எரிவாயு நிறுவனங்களும் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை 96 டொலருக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஓமன் டிரேடிங் நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை 129 டொலருக்கு விலையை நிர்ணயித்துள்ளது.
இதன் காரணமாக சியாம் எரிவாயு நிறுவனத்திற்கு எரிவாயு ஒப்பந்த கோரிக்கையை மே மாதம் 3ம் திகதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ஒப்பந்த கோரிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஓமன் டிரேடிங் நிறுவனத்திடம் ஒப்பந்த கோரிக்கை விடப்பட்டது.
பின்னணியில் அரசு அதிகாரி ஒருவரின் மகன்
இந்நிலையில், எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சியாம் காஸ் நிறுவனத்தின் எரிவாயு ஒப்பந்த கோரிக்கை ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரசு அதிகாரி ஒருவரின் மகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
