பரிதாபத்திற்குரிய ரணில் : எதிர்க்கட்சிகளால் அநுரவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஒருவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை விலக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி அதாவது ரணிலின் மாமனாரான ஜே.ஆர் ஜெயவர்தன கொண்டு வந்த சட்டத்தை நல்லாட்சி அரசு காலத்தில் தானே நீக்கிய ரணிலுக்கு எதிராகவே அந்த சட்டம் பாய்ந்துள்ளமை ரணிலை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது.
அதேநேரம் ரணிலின் கைதை வைத்து அவரை ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தி ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளால் அநுர அரசாங்கத்திற்கு புதிய அழுத்த நிலைமையை உருவாக்கியுள்ளன.
பட்டலந்த படுகொலை தொடர்பாக ரணிலை சிக்கலுக்குள் தள்ளும் முயற்சியில் அநுர தரப்பு ஈடுபட்டபோதிலும் அது தம்மையும் தாக்கும் என தெரிந்ததால் அந்த முயற்சியை கைவிட்டது அநுர தரப்பு.
இந்த நிலையிலேயே பயண செலவு என்ற அடிப்படையில் தற்போது ரணில் மற்றொரு வழக்கில் குறி வைக்கப்பட்டுள்ளார்.
இது போன்ற மேலும் பல விபரங்களை அறிய ஐபிசி தமிழ் இன்றைய பார்வையுடன் இணையுங்கள்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

