உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் இன்று எண்ணெய் வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஏடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
அந்தவகையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கை ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் இழுபறிநிலையின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
பீப்பாய் ஒன்றின் விலை
அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலர்கள் (3.35%) அதிகரித்து, 109.26 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.25 டொலர்கள் (4.2%) அதிகரித்து, 105.42 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு வார காலத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 7.84 சதவீதத்தாலும், WTI எண்ணெய் விலை 10.48 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், தற்காலிக போர்நிறுத்தம் நீடித்த போதிலும், ஹோர்முஸ் நீரிணை விரைவாகத் திறக்கப்படும் என்ற நம்பிக்கை மங்கியுள்ளதாக கொமர்ஸ்பேங்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |