சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார்! ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி
ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள சவால்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக முறியடிப்பார் என செக் குடியசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக செக் குடியரசின் அரச தலைவர் மைலோஸ் சீமன் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிபராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள மைலோஸ் சீமன், அனுபவம் மிக்க தலைவராக அவர் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை
அத்துடன், செக் குடியரசும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நெருங்கிய நட்பை அனுபவித்து வருவதாகவும், அந்த சிறப்பான நல்லுறவை இரு நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் செக் குடியரசின் அரச தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.