போராட்டத்தில் குதிக்கவுள்ள மைத்திரியின் மகன்
Polonnaruwa
Maithripala Sirisena
SL Protest
By Sumithiran
போராட்டத்தில் குதிக்கிறார் மைத்திரியின் மகன்
சிறிலங்கா சுதந்திரக்கட்யின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன விவசாயிகளுக்காக போராட்டத்தில் குதிக்கவுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விளைந்த நெல்லை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் கடும் மன் உளைச்சலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தே அவர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.
பொலனறுவையில் போராட்டம்
நாளை காலை 09.30 மணிக்கு இந்தப் போராட்டம் பொலனறுவையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
தஹாம் சிறிசேன, பொலனறுவை மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் பெற்றுக்கொண்டார்.