குழப்பவாதிகளை வெளியேற்றாவிட்டால் அரசுக்கு ஆபத்து - சாகர காரியவசம் எச்சரிக்கை
srilanka
Gotabaya Rajapaksa
Sagara-Kariyawasam
By MKkamshan
அரசுக்குள் இருக்கும் குழப்பவாதிகளை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அரசுக்குத்தான் ஆபத்து என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்(-Sagara-Kariyawasam) தெரிவித்துள்ளார்.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தலைமையில் கடந்த 24ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான காரணம் என்னவென்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,